திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு தனி அரங்கம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு தனி அரங்கம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.28- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வில், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி வளாகத்தில் அரங் கம் எண் 111 இல் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை அரங்கில், மக்கும் குப்பை, மக்காத குப்பை, சிக்கன் குனியா, டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம், உள்ளிட்ட விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குப்பை சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் இங்கு வரும் பார்வை யாளர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.</p>
