முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

21 Mar 2026, 2:42 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்</strong></p> <p>மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் நிலவும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது &lsquo;கார்ப்பரேட் ஜனநாயகம்&rsquo; ஆக மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு அறக்கட்டளைகள் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பாஜகவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன. கார்ப்பரேட்டுகள் அதிகப் பணம் கொடுத்தால், மோடி அரசு அவர்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கும் சூழல் உள்ளது.</p> <p><strong>நாகா மாணவர் முன்னணி வலைத்தளம்</strong></p> <p>குஜராத் மாநிலம் காந்திநகரில் ஏஐ-ஐப் பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்புக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்த சாமியார் பிரதீப் ஜோடாங்கியா, அவரது சீடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்தி நகர் அமித் ஷாவின் தொகுதி. இதுதான் மோடியின் உண்மையான குஜராத் மாடல்.</p> <p><strong>இந்தியா அன்பில்டர்டு சமூக ஊடகம்</strong></p> <p>பிரதமர் மோடியை மிமிக்ரி செய்து வெளியிடப்பட்ட &nbsp;வீடியோவை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. முன்பு அந்த வீடியோ சாதாரண அளவில் தான் வைரலாகி இருந்தது. ஆனால் வீடியோவை நீக்க உத்தரவிட்ட பின்பு தற்போது தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இது தேவையா?</p> <p><strong>சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்</strong></p> <p>இன்று நமது நாணயம் (ரூபாய்) மரணப் படுக்கையில் உள்ளது. அது இறுதிக்கட்டத்தில் இருப்பதால், அதற்கு உடனடியாக ஒரு மருத்துவரின் கவனிப்பு தேவைப்படுகிறது. பிரதமர் &lsquo;மௌனமாக&rsquo; இருக்கிறார்; பிரதமரைப் போலவே ரூபாயும் தனது குரலை இழந்துவிட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram