பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம்
5 Jan 2026, 6:21 pm
<p><strong>பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம்</strong></p>
<p>மேட்டுப்பாளையம், ஜன.5- பெண் கல்வி அவசியம் குறித்து, மாதர் சங்கம் சார்பில் குமரன் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜனவரி 3 சாவித்திரி பாய் பூலே பிறந்த தினத்தையொட்டி, கோவை, மேட்டுப்பாளையம் குமரன் கல்லூரியில் திங்க ளன்று பெண் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் உஷா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி கருத்துரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் கே.தங்கமணி நன்றி கூறி னார். இதில், மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் ஜீவா மணி, தலைவர் பிரியா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் லதா, வனிதா மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்ட னர்.</p>
