முந்தய பக்கம்

கருத்தரங்கம், இசையரங்கம், நாடக அரங்கம் தமுஎகச மாநாட்டில் அரங்கேற்றம்

7 Dec 2025, 3:52 pm
கருத்தரங்கம், இசையரங்கம், நாடக அரங்கம் தமுஎகச மாநாட்டில் அரங்கேற்றம்
<p><strong>கருத்தரங்கம், இசையரங்கம், நாடக அரங்கம் தமுஎகச மாநாட்டில் அரங்கேற்றம்</strong></p> <p>தஞ்சாவூர், டிச.7 - தமுஎகச மாநில மாநாட்டையொட்டி, 3 ஆவது நாளான சனிக்கிழமை மாலை தமுஎகச கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தரங்கம் &nbsp;அதனையடுத்து, &lsquo;தொடரும் அவலம் துடைக்க&rsquo; கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ச.சிகரம் செந்தில்நாதன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் காணொலி மூலம் உரையாற்றினார். &lsquo;ஆகமத்தின் பெயரால் அநீதி&rsquo; என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் உரையாற்றினார். நிகழ்ச்சியை மருதுபாரதி, பெ.ரவீந்திரன், பா.ஹேமாவதி, மு.ஆனந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கவிதை &nbsp;கவிஞர் சுகிர்தராணி, லட்சயா மன்னார், ஸ்டாலின் சரவணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். &nbsp;ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகளின் நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. &nbsp;நாடகம் நிகழ்ச்சியின் நிறைவாக, சென்னை கலைக் குழுவின், திரைக்கலைஞர் ரோகிணி பங்கேற்ற &ldquo;வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி&rdquo; நாடகம் நடைபெற்றது. பிரளயன் நெறியாள்கை செய்ய, ஜெயகாந்தன், கவிவாணன், நிறங்கள் சிவா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram