தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீக்கம்பட்டு - வட மாம்பாக்கம் சாலையை உடனடியாகச் சீரமைத்துத்தரக் கோரிக்கை

19 Jun 2026, 1:02 am
சீக்கம்பட்டு - வட மாம்பாக்கம் சாலையை  உடனடியாகச் சீரமைத்துத்தரக் கோரிக்கை
<p><strong>சீக்கம்பட்டு - வட மாம்பாக்கம் சாலையை உடனடியாகச் சீரமைத்துத்தரக் கோரிக்கை</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூன் 18- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை ஒன்றியத்தில் உள்ள சீக்கம்பட்டு - வட மாம்பாக்கம் இடையிலான சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<strong> </strong></p><p><strong>சாலையின் அவலநிலை</strong> </p><p>சீக்கம்பட்டு மேம்பாலத்திலிருந்து வட மாம்பாக்கம் வரை செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட தார்சாலை, தற்போது குண்டும் குழியுமாகச் சிதிலமடைந்துள்ளது. தார் பெயர்ந்து ஜல்லிக் கற்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அப்பாதையில் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. </p><p><strong>மக்களின் பாதிப்பு</strong></p><p> இச்சாலை வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன. இதனால் சீக்கம்பட்டு, வட மாம்பாக்கம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமலும், அன்றாடப் பயணங்களுக்குப் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். </p><p><strong>நடவடிக்கை தேவை</strong></p><p> இச்சாலையைச் சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, புதிய தார் சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.