சாக்கோட்டையில் விதை பதப்படுத்தும் கட்டிட பணி துவக்கம்
16 Dec 2025, 3:51 pm
<p><strong>சாக்கோட்டையில் விதை பதப்படுத்தும் கட்டிட பணி துவக்கம்</strong></p>
<p>கும்பகோணம், டிச.16- தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் அருகே, சாக்கோட்டை ஊராட்சியில் அரசு விதை பண்ணையில் ரூ.87.55 லட்சம் மதிப்பீட்டில், மணிக்கு 2 டன் கொள்ளளவு கொண்ட விதை பதப்படுத்தும் பிரிவு மற்றும் அலுவலகத்துடன் கூடிய 250 டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்பு கிடங்கு அமைக்கும் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட வேளாண் மற்றும் உழவர்நலத் துறை இணை இயக்குநர் வித்யா, மாநகராட்சி துணை மேயர் சுப தமிழழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
