தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு
8 Apr 2026, 5:30 am
<p><strong>தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு</strong></p><p>சென்னை, ஏப்.7 - தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 அன்று நிறைவடைந்தது. காலக்கெடு முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 7,454 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.</p><p>இதில் ஆண்கள் 6,095, பெண்கள் 1,356 மற்றும் திருநங்கைகள் 3 பேர் என வேட்புமனு தாக்கல் செய்தனர். கரூர் தொகுதியில் 2021 தேர்தலைப் போலவே இம்முறையும் அதிகபட்சமாக 100 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p>சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 623 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஏப்.7 (செவ்வாய்) அன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.</p>
