தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநர்கள் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு வலியுறுத்தல்!

25 Mar 2026, 1:40 pm
திருநர்கள் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு வலியுறுத்தல்!
<p>திருநர்கள் சட்டத் திருத்த மசோதா-2026ஐ உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.<br /> இந்தியாவின் பன்முகத்தன்மையையும், விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைகளையும் நசுக்கும் செயலை தொடர்ந்து செய்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் &quot;திருநர்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2026&rdquo; என்கிற பெயரில் கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத் திருத்தங்கள் இந்த உரிமையை பறிப்பதோடு, திருநர்களின் உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் அதை ஒரு &quot;அரசுச் சான்றிதழ்&quot; தரும் சடங்காக மாற்ற முயற்சிக்கிறது. ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது மருத்துவக் குழுவிடமோ உறுதி செய்ய வேண்டும் என்கிறது இச்சட்டம்.&nbsp;<br /> இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு, திருநர்கள் சட்டத் திருத்த மசோதா-2026ஐ உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.<br /> திருநர்களின் சுய-அடையாள உரிமையை பறிக்கும் வகையில் மருத்துவ சான்றிதழை கட்டாயமாக்கும் இந்த மசோதா, 2014இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய NALSA தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.&nbsp;<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.