தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்

24 Jul 2026, 9:07 pm
மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி  நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்
<p><strong>மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்</strong></p><p>புதுதில்லி நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, தில்லியில் ஜூலை 20 அன்று நாடாளு மன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாண வர்கள் - இளைஞர்கள் மீது ஒன்றிய உள்து றை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை (தில்லி) வன்முறையை கட்ட விழ்த்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தி யது. </p><p>இந்த தாக்குதல் தொடர்பாக ஜூலை 22 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட தாகவும், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு,”எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். </p><p>உங்கள் நேரத்தை யும் வீணாக்காதீர்கள்” என்று கூறி, விசார ணைக்கு ஏற்க மறுத்ததாகவும் செய்திகள் வெளி யானது. </p><p>இதற்கு கண்டனங்கள் குவிந்தன. </p><p>இளை ஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்தவர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சிகளின் கோரிக்கை யை எப்படி ஏற்பார்? என மாணவர்கள் - இளைஞர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிப தியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.</p><p> இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்பட வில்லை; நான் விசாரிக்க முடியாது என்று கூறவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துள்ளார். </p><p>இதுதொடர்பாக வெள்ளியன்று உச்சநீதிமன்ற திறந்த வெளி நிகழ்வு ஒன்றில் அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை. நான் பதிவகத்தில் சரி பார்த்தேன். </p><p>உச்சநீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப் படவில்லை. நீதிமன்றத்திற்கு வந்தது வெறும் ஒரு கோரிக்கை மனு மட்டுமே</p><p>. அதாவது வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு கோரிக்கை மனு மட்டுமே. </p><p>அந்தக் கோரிக்கை மனுவை நான் எப்படி ஒரு ரிட் மனுவாக கருத முடியும்? ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர். </p><p>கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முற்றி லும் பொய்யான தகவல் பரப்பப்பட்டது.</p><p> அந்த வழக்கை விசாரணைப் பட்டியலிடத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் எந்த பொறுப்புணர்வும் இன்றி பொறுப்பற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்டன. ஆனால், காலை 10 மணி வரை ஒரு பக்கம் கூட தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை” என அவர் கூறினார். </p><p><strong>திங்களன்று விசாரணை : உச்சநீதிமன்றம் சம்மதம்</strong></p><p>தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது காவல்துறையின் தாக்குதல் தொடர்பான மனுவை அவசர வழக்காக வரும் திங்கள் (ஜூலை 27) அன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. </p><p>முன்னதாக, ஜூலை 22 அன்று நரேந்திர மிஷ்ரா தாக்கல் செய்யப்பட்ட தாக கூறப்படும் மனு,”வாய்மொழி கோரிக்கையாக இருந்தது. </p><p>எப்படி விசாரிக்க முடியும்?” உள்ளிட்டவைகளை காரணமாக கூறி விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தற்போது முறையான மனுவை தாக்கல் செய்ததால் விசாரிப்பதாக கூறியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.