மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு
8 Mar 2026, 3:42 pm
<p><strong>மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு </strong></p>
<p>சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறையின் கீழ் செயல்படும், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினம் 2026 முன்னிட்டு “She Leads & Drives the City” என்ற தலைப்பில் தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெண் ஒட்டுநர்கள் சிறப்பு கவுரவிப்பு நிகழ்ச்சி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரில் உள்ள நீலக்கொடிக் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையர் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெண் ஓட்டுநர்களுக்கு கீரிடம் அணிவித்து பரிசு வழங்கி கவுரவித்தார்.</p>
