தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

'சஞ்சார் சாத்தி' செயலி: தனியுரிமை மீதான மோடி அரசின் தாக்குதல்! - சிபிஎம்

2 Dec 2025, 10:30 am
'சஞ்சார் சாத்தி' செயலி: தனியுரிமை மீதான மோடி அரசின் தாக்குதல்! - சிபிஎம்
<p>இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு, தனியுரிமை மீதான தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.<br /> இது குறித்து சிபிஎம் மத்தியக்குழு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> &quot;இந்தியாவில் வெளிவரும் ஒவ்வொரு புதிய மொபைல் போன்களிலும் இப்போது கட்டாயமாக &ldquo;சஞ்சார் சாதி&rdquo; எனப்படும் கண்காணிப்பு செயலியை முன்பே நிறுவியிருக்க வேண்டும் என்ற உத்தரவு மோடி அரசின் சமீபத்திய தனியுரிமை மீதான தாக்குதல்.<br /> இதற்கு ஒப்புதல் கேட்கபடவில்லை. செயலியை நீக்க அனுமதி இல்லை. பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை.&nbsp;<br /> IMEI மோசடியைத் தடுப்பதாக கூறி, ஒவ்வொரு சாதனத்திலும் கட்டாயமாக அரசின் உளவு மென்பொருள், அடிப்படை (root-level) அணுகலுடன் நிறுவப்படுகிறது.<br /> இது மோசடியை தடுக்க கொண்டுவரப்பட்டது அல்ல. இது மோடி அரசின் முழுமையான டிஜிட்டல் கண்காணிப்பை நோக்கி எடுத்துச் செல்லும் முயற்சி &mdash; தனியுரிமை என்ற அடிப்படை உரிமைக்கு நேரடி தாக்குதல்.<br /> அரசியலமைப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை சிபிஎம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. இந்த உத்தரவை திரும்பப் பெறுக. அரசியலமைப்பை மதித்திடுக. மக்களின் மொபைல் போனில் கை வைக்காதே!&quot; இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.