கடலோர பாதுகாப்பு ஒத்திகை
24 Jul 2026, 12:03 am
<p><strong>கடலோர பாதுகாப்பு ஒத்திகை</strong></p><p>தமிழகக் கடலோரப் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ என்ற பிரம்மாண்ட கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஜூலை 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸார் மற்றும் உள்ளூர்ச் சட்டம்-ஒழுங்கு போலீஸார் இணைந்து நடத்தும் இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் முதல் நாளான வியாழக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட கடலோரக் கிராமப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.</p>
