‘உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமும் அழகியலும் இணைந்த எழுத்துக்கு சொந்தக்காரர் ச. தமிழ்ச்செல்வன்’-சிபிஎம் வாழ்த்து
16 Mar 2026, 4:46 pm
<p><strong>‘உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமும் அழகியலும் இணைந்த எழுத்துக்கு சொந்தக்காரர் ச. தமிழ்ச்செல்வன்’-சிபிஎம் வாழ்த்து</strong></p>
<p>சென்னை, மார்ச் 16 - ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்- அந்நூலின் ஆசிரியரும், எழுத்தாளரு மான ச. தமிழ்ச்செல்வனுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரி வித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: தமுஎகச தலைவர்; ‘செம்மலர்’ ஆசிரியர்! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரும், ‘செம்மலர்’ ஆசிரியரு மான எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப் பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக எழுதி வரும் தமிழின் சிறந்த எழுத்தாளரான ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், கட்டு ரைகள், குழந்தை இலக்கியம் மட்டு மல்லாமல் இடதுசாரி அரசியல் சார்ந்த பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். ‘விற்பனையில் சாதனை படைத்த அரசியல் எனக்குப் பிடிக்கும்’ லட்சக்கணக்கான பிரதிகள் விற்ப னையான இவரின் ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’ நூல், இடதுசாரி அரசியலை எளியோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டதாகும். ‘ஜிந்தாபாத் ஜிந்தா பாத்’ நூல் ஒரு இலக்கியவாதியின் தொழிற்சங்க அணுபவத்தை சொல்லும் நூல் ஆகும். இந்த வரிசையில் சமீபத் தில் இவர் எழுத்தில் வெளிவந்த “திருப்பியடித்த வரலாறு” ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத் தின் நூற்றாண்டு கால வரலாற்றை 1000 பக்கங்களில் பதிவு செய்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகும். ச. தமிழ்ச்செல்வன் எழுத்தாளராக மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக மூன்று முறை செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களி லும் மார்க்சியக் கல்வியை எளிய மொழியில் வகுப்பெடுக்கும் சிறந்த ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய ஆட்சியிலுள்ள பாஜக-வின் அரசியல் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்ட இவ்விருது பலரின் கண்ட னக் குரல்களுக்குப் பின் தற்போது வெளிவந்துள்ளது. தனது எழுத்தில் எப்போதும் உழைக் கும் வர்க்கக் கண்ணோட்டத்தில், அழகி யல் குறையாமல் தொடர்ந்து எழுதி வரும் ச. தமிழ்ச்செல்வன், தற்போது விருது பெற்றுள்ள ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலையும் அதே கண்ணோட் டத்தில் எழுதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகை யில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
