ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong> ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்</strong></p>
<p>உள்ளாட்சிகளில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும், பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தங்களில் முறைகேடுகள் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.17) சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில நிர்வாகிகள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, எம்.சந்திரன், சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். </p>
