புதுக்கோட்டையில் ரூ.15 லட்சம் நிதியளிப்பு
24 Jan 2026, 3:38 pm
<p><strong>புதுக்கோட்டையில் ரூ.15 லட்சம் நிதியளிப்பு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் திரட்டப்பட்ட ரூ. 15 லட்சம் நிதி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. கந்தர்வக்கோட்டையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. சண்முகம், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனார்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
