தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.5,432 கோடி காவிரி - அமராவதி உபரி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் ஏரி குளங்கள் நிரப்பப்படும்!

10 Apr 2026, 5:30 am
ரூ.5,432 கோடி காவிரி - அமராவதி உபரி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் ஏரி குளங்கள் நிரப்பப்படும்!
<p><strong>ரூ.5,432 கோடி காவிரி - அமராவதி உபரி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் ஏரி குளங்கள் நிரப்பப்படும்!</strong></p><p>அமைச்சர் அர.சக்கரபாணி வாக்குறுதி சின்னாளப்பட்டி, ஏப்.8- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்தார்.</p><p>அப்போது, ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியின் சாதனைகளாக புதிய சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.</p><p>தொடர்ந்து உரையாற்றிய அவர், ரூ. 5,432 கோடி மதிப்பீட்டில் அமராவதி-காவிரி ஆறுகளை இணையும் இடத்தில் செல்லும் உபரி நீரைப் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உதவி உயர்வு குறித்தும் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.