வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மனு
27 Feb 2026, 5:32 pm
<p><strong>வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மனு</strong></p>
<p> சிவகங்கை, பிப்.27- வாகனங்களை புதுப்பிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக காரைக்குடி போக்குவரத்து துறை அதிகாரி அனிதா வழியாக ஆணையாளருக்கு மனு அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் குமார் ஆகி யோர் அனுப்பியுள்ள மனுவில். எப் .சி. எனப்படும் வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வு மோட்டார் தொழி லில் ஈடுபட்டுள்ள சிறு குறு வாகன உரிமையாளர்க ளுக்கு மற்றும் மோட்டார் தொழிலையே நம்பி உள்ள வர்களுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.</p>
