8698 மாணவர்களுக்கு மடிக்கணினி வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>8698 மாணவர்களுக்கு மடிக்கணினி வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்</strong></p>
<p>விருதுநகர், ஜன.7- உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், 8,698 கல்லூரி மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் வழங்கினார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையேற்றார். சட்டமன்ற உறுப்பி னர்கள் சீனிவாசன்( விருதுநகர்), ஜி.அசோ கன்( சிவகாசி), தங்கபாண்டியன் (இராஜ பாளையம்), சிறுபான்மையின நலவாரிய துணைத்தலைவர் இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வீ.கேச வதாசன், நகர்மன்றத் தலைவர் மாதவன், நேர்முக உதவியாளர்(பொது) பிர்தௌஸ் பாத்திமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
