வருவாய் துறை அலுவலர்கள் எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு
18 Nov 2025, 3:21 pm
<p><strong>எஸ்ஐஆர் திருத்தல் பணி வருவாய்த் துறையினர் புறக்கணிப்பு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, நவ.18- கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வரு வாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு திங்களன்று (நவ.17) போராட்டம் நடைபெற்றது. பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சமூக தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர் இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாநில செயலாளர் ஆனந்த கிருஷ்ணன்,மாவட்ட பொரு ளாளர் தவமணி,அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மகா லிங்கம்,வருவாய்த்துறை சங்க கூட்ட மைப்பு நிர்வாகிகள் செந்தில் முருகன், பிரபாகரன்,அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சாமி துறை,வட்டச் செயலா ளர் குமார தேவன் மற்றும் வருவாய்த்துறை சங்க ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
