பெரியகடை தெரு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டுகோள்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>பெரியகடை தெரு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டுகோள்</strong></p>
<p>மன்னார்குடி, டிச.2- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகடை தெருவில் முற்பகல் 10 மணியிலிருந்து இரண்டு மணி வரை நெருக்கடியான நிலை ஏற்படுவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மன்னார்குடி போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், அன்றாடம் முழுநேரம் நிரந்தரமாக காவலர்களின் நியமனம் சாத்தியமில்லை என்றாலும், தினசரி முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை, மீண்டும் மாலை 4 மணியிலிருந்து, இரவு 7 மணி வரை போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினாலே, போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். அப்போதுதான் மக்களின் நேரம், எரிபொருள் விரயம், சுற்றுச்சூழல் புகை மாசுபாட்டை தவிர்க்க முடியும். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
