தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் பொங்கல் தொகுப்புடன் வழங்க கோரிக்கை

13 Dec 2025, 5:13 pm
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் பொங்கல் தொகுப்புடன் வழங்க கோரிக்கை
<p><strong>கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் பொங்கல் தொகுப்புடன் வழங்க கோரிக்கை</strong></p> <p>அவிநாசி, டிச.13 - அவிநாசியில் பல்வேறு பகுதிகளில் சிஐடியு கட்டிட &nbsp;கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று &nbsp;கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 &nbsp;ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க அவிநாசி &nbsp;ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் கருணைபாளை யம், கவுண்டம்பாளையம், பொன் ராமபுரம் உள்ளிட்ட பகுதி களில் இந்த தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், &nbsp;நலவாரிய பயன்களை தொழிலாளர்களுக்கு தாமதமின்றி &nbsp;உடனே வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயி ரம் கட்டிட கட்டுமானத் தொழிலாளிக்கு வழங்க வேண்டும். &nbsp;ஓய்வூதியத் தொகை ரூ.1200 இருந்து ரூ.3000 உயர்த்தி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அமல்படுத்திய, தொழி லாளர் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் &nbsp;உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. &nbsp;இதில், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்திப் பேசினார். இதில், &nbsp;அமைப்பின் ஒன்றிய துணைத்தலைவர்கள் ராஜன், ராஜ், ஒன்றியப் பொருளாளர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர் பாரூக், முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.