முந்தய பக்கம்

மதுராந்தகம் பேருந்து நிறுத்தத்தில் சாய்தளம் அமைக்கக் கோரிக்கை

23 Mar 2026, 5:33 pm
மதுராந்தகம் பேருந்து நிறுத்தத்தில்  சாய்தளம் அமைக்கக் கோரிக்கை
<p><strong>மதுராந்தகம் பேருந்து நிறுத்தத்தில் &nbsp;சாய்தளம் அமைக்கக் கோரிக்கை</strong></p> <p>மதுராந்தகம், மார்ச் 23- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம், சுற்றுவட்டார கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. &nbsp;இந்தப் பேருந்து நிறுத்தம் ஏரிக்கரை யின் மேல் உயரமாக அமைந்துள்ளதால், பயணிகள் ஏறி இறங்கப் படிகள் மட்டுமே உள்ளன. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இந்தப் பகுதியில் உடனடி யாகச் சாய்தளம் &nbsp;அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். &nbsp;மேலும், கடந்த மாதம் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வராததால், மாணவர்கள் மற்றும் பயணிகள் அன்றாடம் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram