100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை
10 Dec 2025, 4:08 pm
<p><strong>100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை </strong></p>
<p>திருவண்ணாமலை, டிச. 10- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திண்டிவனம், துரிஞ்சி குப்பம், குன்னத்தூர், செங்குணம் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என, போளூர் ஒன்றியத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு சரியான பதில் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், போராட்டத் தலைவர்களை அழைத்துப் பேசி, பதிவு செய்யப்பட்ட திண்டிவனம் கிராமத்தில் 121 பேருக்கும், துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் 45 பேருக்கும், குன்னத்தூர் கிராமத்தில் 18 பேருக்கும், செங்குனம் கிராமத்தில் 28 பேருக்கும், வருகிற 11 - 12 - 2025 முதல் தொடர்ந்து 100 நாள் வேலை தருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். நிகழ்வின் போது, சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வன், போளூர் வட்டார செயலாளர் இரா.இரவிதாசன் , விவசாயிகள் சங்க செயலாளர் அ. உதயகுமார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் மோகன், நகர செயலாளர் பரணி மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p>
