விருதுநகரில் குடியரசு தினக் கொண்டாட்டம் ‘இந்தியாவும், மதச்சார்பின்மையும்’ சிறப்புக் கருத்தரங்கம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>கள்ளக்குறிச்சியில் குடியரசு தின விழா: அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆட்சியர்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, ஜன. 27- கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய 40 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கத்தினையும், 312 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ஜீவா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கி. ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
