புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் திறப்பு
19 Feb 2026, 3:09 pm
<p><strong>புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் திறப்பு</strong></p>
<p>சென்னை எழும்பூரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழனன்று (பிப்.19) திறந்து வைத்து, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஆண்டுகள் பழமையான அரிய ஆவணங்களை பாதுகாக்க ஜப்பானிய திசு முறையில் செப்பனிடும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, கோவி, செழியன், மேயர்ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், உயர் கல்வித்துறை செயலாளர் பொ. சங்கர், இ.ஆ.ப. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் சு. மலர்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
