இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் சாலை மறியல்
27 Mar 2026, 3:15 pm
<p><strong>இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் சாலை மறியல்</strong></p>
<p>இராமேஸ்வரம், மார்ச் 27- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் வெள்ளியன்று தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 25ஆம் தேதி இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து சசிகுமார் மற்றும் சிம்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காரை நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தமிழக மீனவர்கள் 7 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்களை கைது செய்ததைக் கண்டித்தும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெள்ளிக்கிழமையன்று மீனவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.</p>
