சாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டத்திற்கான பரிந்துரைகள் கே.என். பாஷா ஆணையத்திடம் அளிப்பு
12 Jan 2026, 6:02 pm
<p><strong>சாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டத்திற்கான பரிந்துரைகள் கே.என். பாஷா ஆணையத்திடம் அளிப்பு</strong></p>
<p>சாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஆராய்வதற்கு, ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான அந்த ஆணையத்திடம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலான பரிந்துரைகளை, முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி. சுகந்தி, மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். வழக்கறிஞர்கள் டி.ஆர். உதயகுமார், கே.சி. காரல் மார்க்ஸ், ஆர். திருமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.<br />
</p>
