தாராசுரம் நூலகத்தை மேம்படுத்த வாசகர்கள் வேண்டுகோள்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>தாராசுரம் நூலகத்தை மேம்படுத்த வாசகர்கள் வேண்டுகோள்</strong></p>
<p>கும்பகோணம், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி வார்டு எண்.31-இல் தாராசுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகில், மாவட்ட கிளை நூலகம் கடந்த 2009 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 31,252 நூல்கள் உள்ளன. இதனை சுமார் 3,425 உறுப்பினர்கள், தினமும் 40 முதல் 50 வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தாராசுரம் நூலக கட்டி டத்தின் மேல்தள ஓடுகள் சிதிலமடைந்து மழைக் காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு வாசகர்களுக்கு பயன்பட்டு வரும் நூல்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் சேதமடைந்து உள்ளன. நூலகத்தின் அலுவலக கட்டிட சுற்றுச்சூழல் சுகா தாரமற்ற நிலையில் இருக்கிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக வாசகர்கள் குறைந்து வரும் நிலை நீடிக்கும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட கிளை நூலகத்தை புதுப்பித்து, ஓர் அறிவு சார் நூல கத்தை அமைத்துத் தந்து மாணவர்கள், கல்வியாளர்கள் நலன் மேம்படவும், பொதுமக்கள் நலன் காக்கவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</p>
<p> </p>
