அடிப்படை வசதி செய்து தர வேண்டும் ரத்தினபுரி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
9 Feb 2026, 3:02 pm
<p><strong>அடிப்படை வசதி செய்து தர வேண்டும் ரத்தினபுரி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>விருதுநகர், பிப்.9- சிவகாசி அருகே உள்ள ரத்தினபுரி நகரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வச திகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் திங் களன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள ரத்தின புரி நகரில் சுமார் 200 குடி யிருப்புகளில் 800க்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்ற னர். மேலும், இப்பகுதியில் ஏராளமான பட்டாசு கடை களும் செயல்பட்டு வரு கின்றன. இருப்பினும், இப்பகுதி யில் சாலை வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் எது வும் இல்லை. இதனால் குடி நீருக்காக பொதுமக்கள் தனி யாரிடம் இருந்து விலை கொடுத்து தண்ணீர் வாங் கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தெருவிளக்குகள் இல் லாத காரணத்தால், இரவு நேரங்களில் வெளியே செல்ல மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், மண் சாலையாக உள்ள தால் மழைக் காலங்களில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற் படுவதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, ரத்தினபுரி நக ரில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வச திகளை உடனடியாக செய்து தர மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.</p>
