சாலை விரிவாக்கத்தின் போது குழாய் உடைந்தது குடிநீர் வீண்
8 Jul 2026, 1:39 am
<p><strong>சாலை விரிவாக்கத்தின் போது குழாய் உடைந்தது குடிநீர் வீண்</strong></p><p>சென்னை, ஜூலை 7- ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே, சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளின் போது பூமிக்கடியில் இருந்த குடிநீர் குழாய் எதிர் பாராதவிதமாக உடைந்தது. இதனால் கடந்த சில நாட்களாகச் குடிநீர் சாலையில் ஆறாக ஓடி வீணாகி வருகிறது. குடிநீர் வீணாவதைச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் அலட்சியமாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, உடைந்த குழாயைச் சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><br></p>
