தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயம்? கல்வித்துறையின் அலட்சியம் !

8 May 2026, 12:29 am
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயம்? கல்வித்துறையின் அலட்சியம் !
<p><strong>10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மாயம்? கல்வித்துறையின் அலட்சியம் !</strong></p><p>ராணிப்பேட்டை, மே 7 – தமிழகத்தில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாரிகள் பெரும் மெத்தன போக்கால் மாணவர் ஒருவரின் விடைத்தாள் காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கடந்த மார்ச் 25ம் தேதி நடைபெற்ற 10ஆம் வகுப்பு கணிதப் பாட தேர்வின் போது, ஒரு மாணவனின் விடைத்தாள், விடைத்தாள்களை பிரித்து அடுக்கும் &#39;கலக்கிப் பிரித்தல்&#39; ராணிப்பேட்டை மையத்தில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.</p><p> பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் பொதுத் தேர்வுப் பணிகளில், ஒரு மாணவனின் விடைத்தாள் காணாமல் போனது அதிகாரிகள் கவனக் குறைவா அல்லது திட்டமிட்ட அலட்சியமா என்ற கேள்வி டீ கடை பென்ச் வரை எழுந்துள்ளது. </p><p>இது குறித்து விளக்கம் பெற ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவ லரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, &quot;மீண்டும் அழைக்கிறேன்&quot; என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். </p><p>இதனைத் தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்ற செய்தியாளர், &quot;அதிகாரி வேலையாக இருக்கிறார்&quot; எனக் கூறி அலுவலக ஊழியர்கள் அனுமதி மறுத்து அலைக்கழித்துள்ளனர். </p><p>இந்நிலையில் கடந்த மார்ச் 6ம் தேதி, பொதுத்தேர்வு பணி ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து &#39;தீக்கதிர்&#39; நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. </p><p>அப்போது ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உரிய கவனம் செலுத்தி இருந்தால், தற்போது மாணவனின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இத்தகைய விபரீதத்தை தடுத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். </p><p>தற்போது மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் சூழலைப் பயன்படுத்தி, கல்வித்துறை அதிகாரிகள் இவ்வளவு பெரிய தவறை மறைக்க முயல்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p> &quot;ஒரு மாணவனின் ஓராண்டு உழைப்பு வீணாவதை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. </p><p>விடைத்தாள் மாயமானது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,&quot; என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. </p><p>தேர்தல் பணிகளுக்கு மத்தியில், மாணவர்களின் எதிர்காலம் சார்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.