தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 21 - ஈகைப் பெருநாள் எனப்படும் ரம் ஜான், சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்கள் உற்றார் - உற வினர்களை ஆரத்தழுவி வாழ்த்துக் கள் பரிமாறிக் கொண்டனர். பள்ளி வாசல்கள் மற்றும் திறந்தவெளி திடல் களில் சிறப்பு தொழுகைகளை நடத்தி னர். அத்துடன், சாதி-மதம் கடந்து, அனைத்து ஏழை - எளிய மக்களுக்கு புத்தாடைகளையும், பிரியாணி உள் ளிட்ட உணவு வகைகளையும், பணத் தையும் பரிசாக வழங்கினர். தமிழகத்தில், சென்னை பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத் தில் மமக சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். தொழு கைக்குப் பின்னர் மமக தலைவர் ஜவா ஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார். சென்னை தீவுத்திடல், திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இடங்க ளிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொழுகை நடைபெற்றது. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, சிதம்பரம், திருச்சி, மணப்பாறை, பாளையங்கோட்டை, மதுரை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி என்று மாநிலத்தின் அனை த்து மாவட்டங்களில் தொழுகை நடை பெற்ற இடங்களிலும் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.</p>
