இராமநாதபுரம் போக்குவரத்துக் கழக சிஐடியு புறநகர் கிளை ஆண்டு பேரவை
9 hours before
<p><strong>இராமநாதபுரம் போக்குவரத்துக் கழக சிஐடியு புறநகர் கிளை ஆண்டு பேரவை</strong></p><p>இராமநாதபுரம், ஆக.31–இராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு புறநகர் கிளையின் ஆண்டு பேரவைக் கூட்டம் கிளைத்தலைவர் எஸ்.போஸ் தலைமையில் நடைபெற்றது.</p><p>கூட்டத்தில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மண்டல பொதுச் செயலாளர் வி.பாஸ்கரன் தொடக்க உரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல் வாழ்த்துரையாற்றினார். சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார்.</p><p><br></p><p><strong>புதிய நிர்வாகிகள்</strong></p><p>தலைவராக எஸ்.செந் தில்குமார், செயலாளராக எம்.பாஸ்கரன், பொருளாளராக எஸ்.ராம்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p><br></p><p><strong>தீர்மானங்கள்</strong></p><p>பராமரிப்புத் துறைக்கு தேவையான பேருந்து உதிரி பாகங்களை உடனடியாக வாங்க வேண்டும்; பராமரிப்புப் பணியாளர் களை நியமிக்க வேண்டும்; கேன்டீன் சுகாதாரத்தை மேம்படுத்தி, தரமான உணவுவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.</p><p><br></p>
