பத்திரிகையாளர்களை மிரட்டும் ராஜஸ்தான் பாஜக அரசு
10 May 2026, 9:04 pm
<p><strong>பத்திரிகையாளர்களை மிரட்டும் ராஜஸ்தான் பாஜக அரசு</strong> </p><p>பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், அம்மாநில தலைமைச் செயலாளர் மற் றும் நிர்வாகத்தை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் கட்டுரை வெளி யிட்டார் மகேஷ் ஜலானி என்ற பத்திரிகை யாளர். அவர் கட்டுரையில் கூறியது உண்மையானது என ராஜஸ்தான் மக்க ளும் கூறி வருகின்றனர். </p><p>இந்நிலையில், மகேஷ் ஜலானி மீது மே 8 அன்று ஜெய்ப்பூர் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தலைமைச் செயலக அலுவலகத்தின் உத்தரவின் பேரில், ராஜஸ்தான் உள்துறை அமைச்ச கம் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தியதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>வழக்குப் பதிவு செய்த பின் பத்திரி கையாளர் மகேஷ் ஜலானி முகநூலில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசை விமர்சித்தால் இந்த நடவடிக்கை தான் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் என ராஜஸ்தான் பாஜக அரசு மிரட்டும் வேலையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
