தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி ரிலாக்சோ ஆலை தொழிலாளர் எழுச்சி

28 May 2026, 10:00 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி ரிலாக்சோ ஆலை தொழிலாளர் எழுச்சி
<p><strong>வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி ரிலாக்சோ ஆலை தொழிலாளர் எழுச்சி</strong></p><p><strong>‘நிரந்தரமான தற்காலிகத் தன்மைக்கு’ முடிவு கட்டிய உழைப்பாளர்கள்</strong></p><p><strong>வேலைநிறுத்தம் 39</strong></p><p>பிவாடி, மே 28- ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் -பிவாடி தொழில் மண்டலத்தில் நிலவி வந்த உழைப்புச் சுரண்டல் கணக்கீடு களைத் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி முற்றிலும் தகர்த்தெறிந்துள் ளது. </p><p>இந்தியாவின் மிகப்பெரிய காலணி உற்பத்தி நிறுவனமான ரிலாக்சோ ஃபுட்வேர்ஸ் லிமிடெட் (Relaxo Footwears Ltd.) </p><p>ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களை வறுமை யில் தள்ளிய ‘நிலையான தற்காலிகத் தன்மை’ (Permanent Tempora riness) என்ற கார்ப்பரேட் சுரண்டல் முறைக்கு எதிராக நடத்திய வீரம் செறிந்த வேலைநிறுத்தப் போராட்டம், இப்பிராந்தியத்தின் தொழில்துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. </p><p>தினசரி 10 லட்சத்திற்கும் அதிகமான காலணிகளை உற்பத்தி செய்து, இந்திய நுகர்வோர் சந்தையின் கால் பகுதியைத் தன்வசம் வைத்துள்ள ரிலா க்சோ நிறுவனத்தின் பிரம்மாண்ட உற்பத்திப் பிரிவும், வடஇந்தியாவிற் கான அதன் மத்திய விநியோகக் கிடங்கும் பிவாடி மற்றும் கஹ்ரானி தொழிற்பேட்டைகளில் அமைந்துள் ளன. </p><p>இவ்வாலைகளில் பணிபுரியும் சுமார் 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்களே தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க இந்த நேரடிப் போராட்டத்தில் குதித்தனர்.</p><p> ஊதிய பாகுபாடும் வெடித்த அதிருப்தியும் ரிலாக்சோ ஆலையின் மொத்த உழைப்புச் சக்தியில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், ரசாயனக் கலவை (Chemical Compounding), இன் ஜெக்ட் முறை மோல்டிங் (Injection Molding) மற்றும் பேக்கேஜிங் போன்ற கடினமான உற்பத்திப் பணிகளில் ஈடு படுத்தப்பட்டு வந்தனர்.</p><p> இவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 230 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலான (மாதத் திற்கு ₹7,000 முதல் ₹9,000 வரை) மிகக் குறைந்தபட்ச தினக்கூலியே வழங்க ப்பட்டு வந்தது. </p><p>மேலும், இபிஎப் தொ கையைச் செலுத்துவதில் தாமதம், 12 மணி நேர வேலைக்குக் கூடுதல் நேர ஊதியம் தராமை, ஒப்பந்தக்கா ரர்களின் அத்துமீறிய பணிநீக்கங்கள் எனத் தொழிலாளர்கள் தொடர் ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். </p><p>இத்தகைய சூழலில், அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்த பட்ச ஊதியம் 35 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் 21 சதவீத மும் உயர்த்தப்பட்டது பிவாடி தொழிலா ளர்களை உசுப்பியது. </p><p>ஒரே தேசிய தலைநகர் பிராந்திய (NCR) தொழில் சூழலில் இருந்துகொண்டு, அண்டை மாநிலத் தொழிலாளர்களின் ஊதி யத்தில் பாதியைக்கூடத் தங்களுக்கு வழங்க மறுக்கும் கார்ப்பரேட் நிர்வா கத்தின் போக்கிற்கு எதிராகத் தொழி லாளர்கள் டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகத் தங்களை ரகசியமாக ஒருங்கிணைத்துக் கொண்டனர்.</p><p> ‘ரிலாக்சோ சவுக்’ முற்றுகையும் ஆலை வாயில் வன்முறையும் ஏப்ரல் 16 அன்று ரிலாக்சோ ஆலை யின் ஆயிரக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் பணிகளை ஒட்டுமொத்தமாக முடக்கி, உற்பத்தியை ஸ்தம்பிக்கச் செய்தனர்.</p><p> அதுமட்டுமின்றி, அண்டை ஆலைக ளின் தொழிலாளர்களுடன் கைகோ ர்த்து, பிவாடியின் முக்கியப் போக்கு வரத்துச் சந்திப்பான ‘ரிலாக்சோ சவுக்’ (Relaxo Chowk) பகுதியை முற்று கையிட்டுப் பிராந்தியப் போக்குவரத்து வழித்தடங்களை முழுமையாக முடக்கி னர். </p><p>ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 20,000 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஆலைக ளில் முறையான மனித உள்கட்ட மைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். </p><p>வேலை மாற்றங்களின்போது (Shift Changes), தொழிலாளர்களின் போரா ட்டத்தை ஒடுக்க நிர்வாகம் தரப்பில் குண்டர்கள் ஏவப்பட்டதால் போரா ட்டம் வன்முறையாக மாறியது. </p><p>கார்ப்ப ரேட் அடியாட்களின் தாக்குதலுக்கு எதி ராகத் தொழிலாளர்கள் போர்க்குணத்து டன் பதிலடி கொடுத்தனர்.</p><p> நிலைமை விபரீதமானதை அடுத்து, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஆலை வாயில்களில் பெரும் படைகளைக் குவித்துத் தற்காலிக அமைதியைக் கொண்டு வந்தன. </p><p>சிஐடியு தலையீடு இந்தப் போராட்டக் கொந்தளிப்பை தொடர்ந்து, இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ராஜஸ்தான் மாநில பொதுச் செயலாளர் வி.எஸ். ராணா தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிவாடி தொழில் மண்ட லத்திற்கு நேரில் சென்று தொழிலாளர் களைத் திரட்டினர். </p><p>5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வர்க்க ஒற்றுமைப் பொதுக்கூட்டம் ரிலாக்சோ ஆலை வாயிலில் நடைபெற்றது. </p><p>தொழிலாளர்கள் எவ்வித கார்ப்பரேட் அச்சுறுத்தல்களுக்கும் பணியக் கூடாது என்று அழைப்பு விடுத்த சிஐடியு பொதுச் செயலாளர் வி.எஸ். ராணா, போராட்டங்களை முறைப்படி வழிநடத்தத் தொழி லாளர்கள் தங்களின் சொந்தப் ‘போரா ட்டக் குழுக்களை’ (Struggle Com mittees) உருவாக்குமாறு வழிகாட்டி னார். </p><p>அதன்படி உடனடியாக ஆலைத் தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட போராட்டக் குழு, நிர்வாகத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தைப் பெற்றது. </p><p>ராஜஸ்தான் மாநில சிஐடியு குழு இப்போராட்டத்திற்குத் தனது முழு மையான வர்க்க ஒருமைப்பாட்டை பிரகடனம் செய்தது. </p><p>எட்டப்பட்ட ஊதிய ஒப்பந்த உடன்பாடு நீண்டகால உற்பத்தி முடக்கம் தங்களின் பொருளாதார நிலையைச் சீர்குலைக்கும் என்பதை உணர்ந்த பிவாடி உற்பத்தியாளர்கள் சங்கம் (BMA) மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டனர். </p><p>பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் அண்டை மாநில ஊதிய விகிதங்க ளுக்கு இணையான உயர்வை வழங்க ஒப்புக்கொண்ட போதிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டன. </p><p>இறுதியாக, அண்டை ஆலையான மதர்சனில் எட்டப்பட்ட திருத்தப்பட்ட ஊதிய உடன்பாட்டின்படி, ரிலாக்சோ தொழிலாளர்களுக்கும் மாதத்திற்கு 3,370 ரூபாய் தட்டையான ஊதிய உயர்வு (Flat Wage Hike) எழுத்துப்பூ ர்வமாக உறுதி செய்யப்பட்டது. </p><p>இதன் மூலம், உழைப்பாளர்களின் அடிப்படை மாத ஊதியம் 10,370 ரூபாய் முதல் 12,370 + ரூபாய் என்ற புதிய ஊதிய வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>நிதி சார்ந்த இந்த வெற்றியைத் தாண்டி, உழைப்பாளர்களின் மனித உரிமைகளை மதிக்கும் வகையில் மூன்றாம் தரப்பு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஆலை குண்டர்களின் அத்து மீறல்களையும், துன்புறுத்தல்களை யும் உடனடியாக நிறுத்துவதாக ரிலா க்சோ மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலை வாயிலில் தொழிலாளர்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது. </p><p>ஆலைகளில் அடிப்ப டை உள்கட்டமைப்பு சலுகைகளை மேம்படுத்தவும் நிர்வாகம் ஒப்புக்கொ ண்டுள்ளதை அடுத்து, இப்போராட்டம் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது.</p><p> தி லெப்ட் வியூஸ்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.