இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை
31 May 2026, 10:00 pm
<p><strong>இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை</strong></p><p>இராஜபாளையம், மே 31- இராஜபாளையம் நகரில் செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லா ததால் புகார் அளிக்க வரும் பெண்கள் மற்றும் பொதுமக் கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>இந்த காவல்நிலை யத்தில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர்கள் மற்றும் காவ லர்கள் பணியாற்றி வரு கின்றனர். </p><p>சமீபத்தில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்த லைத் தொடர்ந்து, இங்கு பணியாற்றி வந்த சில அதி காரிகள் இடமாற்றம் செய் யப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். </p><p>இந்நிலையில், காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க வருபவர்களுக்கு காத்திருப்பதற்கான அறை வசதி இல்லாததால், அவர் கள் காவல்நிலையத்திற்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. </p><p>மேலும், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி களும் போதுமான அளவில் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p> புகார் மனு அளித்த பிறகு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதுடன், சில நேரங் களில் “நாளை வாருங்கள்” என கூறி அனுப்பப்படுவதாக வும், மறுநாளும் அதே நிலை தொடர்வதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. </p><p>மனுக் களின் மீது விரைந்து நட வடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும், குற்றச்சாட் டுக்கு உள்ளானவர்களை நேரில் சென்று அழைத்து விசாரிப்பதற்குப் பதிலாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p> இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனி யாண்டி கூறுகையில், “மக ளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பெண் கள் புகார் அளிக்க வருகின்ற னர்.</p><p> அவர்களுக்கு அமர்வ தற்கான இருக்கை வசதி கூட இல்லை. </p><p>பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை யில், குடிநீர் மற்றும் கழிப் பறை வசதிகளும் இல்லா தது வேதனைக்குரியது. </p><p>புகார் மனுக்களை விரைந்து விசாரித்து தீர்வு காணும் நடைமுறையையும் காவல் துறை உறுதி செய்ய வேண் டும்” என்றார். </p><p>மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் இராஜபாளையம் உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நேரடி யாக தலையிட்டு காவல் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். </p><p>கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால், பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.</p>
