ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2500 அபராதம்
21 Jun 2026, 11:09 pm
<p><strong>ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2500 அபராதம்</strong></p><p> சென்னை: ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் அபராதம் ரூ.500-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் சனிக் கிழமை முதல் அமலுக்கு வந்தன. ரயில்வே செயல்பாடு களை வலிமைப்படுத்தவும், பயணிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவும் வகையில், பல விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ரயில்களில் மகளிர் பெட்டிகளில் அனுமதியின்றி ஆண்கள் நுழைந்தாலோ அல்லது பயணித்தாலோ அபராதத் தொகை ரூ.2,500 விதிக்கப்பட்டுள்ளது. முன்பு இத்தொகை ரூ.500 ஆக இருந்தது. இது தவிர, ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, முன்பு ரூ.250 அப ராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை, ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.</p>
