ரயில்வே வாரியம் இயக்குநர் அருணா நாயர் ஐசிஎப்-க்கு வருகை
6 Feb 2026, 5:17 pm
<p><strong>ரயில்வே வாரியம் இயக்குநர் அருணா நாயர் ஐசிஎப்-க்கு வருகை</strong></p>
<p>சென்னை, பிப். 6- ஐசிஎப்-இல் உள்ள பல்வேறு பணியாளர் நல வசதிகளை ரயில்வே வாரி யம் இயக்குநர் ஜெனரல் (மனித வளம்) அருணா நாயர் பார்வையிட்டதோடு, ஊழியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள வசதி களையும் ஆய்வு செய்தார். மேலும், வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் பெட்டிகளின் உற்பத்தி செயல்முறைகளையும் அவர் ஆய்வு செய்தார். அவர் மகிளா சக்தி குழு வினருடன் கலந்துரையாடி, நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டினார். அதன் பின் அருணா நாயர், பொது மேலாளர் யு.சுப்பா ராவ் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, நடைபெற்று வரும் திட்டங்கள், உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சிகள் குறித்து ஆலோ சனைகளை மேற்கொண் டார். அவர் பணியாளர் பிரதி நிதிகள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுடனும் கலந்து ரையாடினார்.</p>
