தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பை மேம்படுத்த ஆர். சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்

10 Dec 2025, 4:08 pm
தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பை மேம்படுத்த  ஆர். சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்
<p><strong>தமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பை மேம்படுத்த &nbsp;ஆர். சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்</strong></p> <p><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் &nbsp;ஆர்.சச்சிதானந்தம், மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) துறை இணை அமைச்சர் &nbsp;ஸ்ரீ ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராஜியை புதுதில்லியில் டிச.10 புதனன்று &nbsp;சந்தித்து, தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்தக்கோரி விரிவான கோரிக்கை மனுவை வழங்கினார்.&nbsp;</strong></p> <p>சமீபத்தில் தமிழ்நாட்டு மருத்துவ அலுவலர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் நல அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதங்களையும் இணைத்து, தமிழ்நாட்டில் ஆயுஷ் முறைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் அவசியம் மற்றும் &nbsp;அவற்றின் பயன்களை எடுத்து ரைத்தார். குறிப்பாக, ஆங்கில மருத்துவத்தின் செலவினங்கள் அதிகரித்து வருவதால், ஆயுஷ் மருத்துவ முறைகள் மக்களுக்குக் குறைந்த செலவில் சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.&nbsp;</p> <p>முக்கியக் கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், தமிழ்நாடு ஆயுர்வேத மருத்துவ அலுவலர்கள் சங்கம் எழுப்பிய பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்: &nbsp;முதுநிலைக் கல்வி மேம்பாடு: ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். &nbsp;</p> <p>ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை: நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த (Integrated) ஆயுஷ் சிகிச்சையை உறுதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.</p> <p>&nbsp;மண்டல பஞ்சகர்மா மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் ஆராய்ச்சி வசதிகளுடன் மண்டல பஞ்சகர்மா மையங்களை (Zonal Panchakarma Centres) நிறுவ வேண்டும். &nbsp;தேசிய அளவிலான நிறுவனங்கள்: தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான நிறுவனங்களை (National level institutes) அமைக்க வேண்டும். &nbsp;மருந்து உரிமம் வழங்கும் அதிகாரம்: ஆயுர்வேதம் மற்றும் சித்தா போன்ற குறிப்பிட்ட மருந்துகளுக்கான உரிமம் வழங்கும் அதிகாரிகளை (System Specific Drug Licencing Authorities) நியமிக்க வேண்டும்.</p> <p>&nbsp;இஎஸ்ஐ மருத்துவமனைகளில் விரிவாக்கம்: ஊழியர் அரசு ஈட்டுறுதி (ESI) மருத்துவமனைகளில் ஆயுர்வேத சிகிச்சை சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இது பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கும் இஎஸ்ஐ பயனாளிகளுக்கும் மிகுந்த பலனளிக்கும். &nbsp;ரயில்வே மருத்துவமனைகளில் சேவை: ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரயில்வே மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.</p> <p>&nbsp;பஞ்சகர்மா ஆரோக்கிய மையம்: அதிகரித்து வரும் பல்வேறு துறைசார் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பஞ்சகர்மா ஆரோக்கிய மையத்தை (Panchakarma Wellness Centre) நிறுவ வேண்டும். &nbsp; நடமாடும் ஆயுஷ் பிரிவுகள்: கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சேவை செய்ய நடமாடும் ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளை (Mobile Ayurveda Units) அறிமுகப்படுத்த வேண்டும். &nbsp;மருத்துவத் தாவரத் தோட்டம்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் (Sirumalai) மூலிகைச் செடிகளுடன் கூடிய மருத்துவத் தாவரத் தோட்டம் / பூங்காவை அமைக்க வேண்டும்.</p> <p>இராமாயணக் கால சஞ்சீவி மலையின் ஒரு பகுதியாகச் சிறுமலை கருதப்படுவதால், இது மூலிகை மருத்துவ ஆய்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும். &nbsp;இந்தக் கோரிக்கைகளை விரைவில் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட சச்சிதானந்தம், எம்.பி., இம்முயற்சிகள் தமிழ்நாட்டு மக்களுக்கும், குறிப்பாக வழக்கமான &nbsp;மருத்துவச் சிகிச்சையைப் பெறுபவர்களுக்கும் பெரும் பயன்களை அளிக்கும் என்று வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.