தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குவாரிகள் மூடலால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ. 100 அதிகரிக்கும் அபாயம்

28 May 2026, 9:43 pm
குவாரிகள் மூடலால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ. 100 அதிகரிக்கும் அபாயம்
<p><strong>குவாரிகள் மூடலால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ. 100 அதிகரிக்கும் அபாயம்</strong></p><p>சென்னை, மே 28 - குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் ஜல்லி, எம்-சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>இதுதொடர்பாக, சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p> “தமிழ்நாட்டில் பல குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் கட்டுமானத் துறையில் பெரிய தாக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. </p><p>குறிப்பாக ஜல்லி, எம்-சாண்ட் போன்ற அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது. </p><p>இதன் காரணமாக கட்டிடம் கட்டும் செலவு சதுர அடிக்கு ரூ. 100 வரை கூடும் அபாயம் இருப்பதாக கட்டுமானத் துறை யினர் கவலை தெரிவிக்கின்றனர். </p><p>சட்டவிரோத கல் எடுப்பை அரசாங்கம் கட்டுப்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால், அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.</p><p> தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு, ஜல்லி தேவை - 50,000 முதல் 60,000 லோடுகள், எம்-சாண்ட் தேவை - 60,000 முதல் 70,000 லோடுகள் இந்த அள விலான தேவைக்கு போதுமான உற்பத்தி இல்லாத நிலை ஏற்பட்டால், மிகப்பெரிய தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது</p><p>. இதனால் கட்டுமானப் பணிகள் தாமதம், பொருட்களின் விலை உயர்வு, வீடு கட்டும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை, தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்ற பிரச்ச னைகள் உருவாகலாம்.</p><p> எனவே அரசு உடனடி மாற்று ஏற்பாடுகள், புதிய அனுமதிகள், கண்காணிப்பு முறைகள் மற்றும் கட்டுமானத் துறையினருடன் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டியது அவசியமாகி யுள்ளது” என்று வெங்கடாசலம் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.