10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை; ' தஞ்சை மாவட்டம் 3-ஆவது இடம் பிடித்து அசத்தல்!
21 May 2026, 10:57 pm
<p><strong>10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை; '</strong></p><p><strong>தஞ்சை மாவட்டம் 3-ஆவது இடம் பிடித்து அசத்தல்!</strong></p><p>புதுக்கோட்டை/தஞ்சாவூர்,மே 21- நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், தமிழ் நாட்டிலேயே 97.57 சதவீத தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. </p><p>இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் 97.41 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்து மிகப்பெரிய எழுச்சியைப் பதிவு செய்துள்ளது.</p><p>பாய்ச்சல் வேகத்தில் புதுக்கோட்டை முதலிடம்! கடந்த சில ஆண்டுகளாகப் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டம், இந்த ஆண்டு கல்வித் துறையில் அசுர பாய்ச்சலை மேற் கொண்டு ஒட்டுமொத்த தமிழ கத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. கடந்த 2023-24 கல்வி ஆண்டில் மாநில அளவில் 23-ஆவது இடத்திலும், 2024-25 கல்வி ஆண்டில் 25-ஆவது இடத் திலும் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், தற்போதைய பொதுத் தேர்வில் அனைத்துத் தடைகளை யும் உடைத்தெறிந்துவிட்டு முத லிடத்திற்கு முன்னேறி முத்திரை பதித்துள்ளது. </p><p>மாவட்டத்தில் உள்ள 335 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 22,337 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.</p><p> மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.53 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.53 ஆகவும் உள்ளது</p><p>. சராசரியாக 97.57 சதவீதம் தேர்ச்சிபெற்று மாநி லத்தின் உச்சிக்குச் சென்றுள்ளது புதுக்கோட்டை. 174 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்த அசாத்திய சாதனைக்குக் காரணமாய், மாவட்டம் முழுவதும் உள்ள 174 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன</p><p>. இதில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீரமங்கலம் அரசு மக ளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியவை அடங்கும்.</p><p> குறிப்பாக, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என எளிய பிள்ளைகள் படிக்கும் 105 பள்ளிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது கூடுதல் பெருமிதத்திற்குரியது. </p><p>மேலும், கடந்த ஆண்டுகளில் சில பள்ளி கள் 70 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு பள்ளிகூட 70 சதவீதத்திற்குக் கீழ் செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>முதன்மைக் கல்வி அலுவலருக்குப் பாராட்டு மழை மாவட்டத்தின் இந்த இமாலய சாதனையைத் தொடர்ந்து, புதுக் கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகத்தை பள்ளிக் கல்வி இயக்குநர் சால்வை அணிவித்து நேரில் வாழ்த்திப் பாராட்டினார். </p><p> தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்வில், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் எம்.வீரமுத்து, மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அ.மண வாளன் ஆகியோர் பங்கேற்றனர். </p><p>தனது நன்றியைப் பதிவு செய்த முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், “மாவட்ட ஆட்சி யரின் அறிவுரைகளின் படியும், பள்ளிக் கல்வித்துறை இயக்குந ரின் வழிகாட்டுதலின்படியும் இத்த கைய சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது. </p><p>இதற்கு ஒத்துழைத்த கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். </p><p>இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு புதுக்கோட்டை மாவட்டத்தின் இந்தச் சாதனையை இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் மு.வாசுதேவன், செயலாளர் இரா.வசந்தகுமார் ஆகியோர் மன தாரப் பாராட்டி அறிக்கை வெளி யிட்டுள்ளனர். </p><p>அதில், “அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதி களை இன்னும் மேம்படுத்தி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய குடும்பத்து குழந்தைகள் மேலும் பல சாதனைகளைப் படைப்பா ர்கள்.</p><p> அதற்கு மாநில அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். </p><p>3-ஆவது இடத்தைப் பிடித்து தஞ்சை எழுச்சி! தஞ்சாவூர் மாவட்டமும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவு களில் மிகப்பெரிய வரலாற்று எழுச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு 12-ஆவது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 15-ஆவது இடத்திலும் இருந்த தஞ்சை மாவட்டம், இந்த ஆண்டு 97.41 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. </p><p>மாவட்டத்தில் உள்ள 408 பள்ளிகளில் இருந்து மொத்தம் 29,618 பேர் தேர்வு எழுதியதில், 28,851 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். </p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 230 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.</p><p> குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அபார மாக உயர்ந்துள்ளது. </p><p>கடந்த முறை 88 அரசுப் பள்ளிகள் மட்டுமே நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், இந்த முறை அது 116 ஆக உயர்ந்து தஞ்சை மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளது. (ந.நி.)</p><p><br></p>
