புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் 11.55 கி.மீ., தொலைவு ஸ்கேட்டிங் சாதனை
14 May 2026, 9:08 pm
<p><strong>புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் 11.55 கி.மீ., தொலைவு ஸ்கேட்டிங் சாதனை</strong></p><p>புதுக்கோட்டை, மே 14- புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவு ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்த 5 வயது சிறுவனுக்கு, ‘இந்தியா’ சாதனைப் புத்தக நிறுவனத்தினர் பதிவுச் சான்றிதழ் அனுப்பியுள்ளனர். </p><p>பொழில் மகிழன் என்ற 5 வயது சிறுவன், கடந்த மார்ச் 26ஆம் தேதி கலைஞர் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளத்தில் ஒரு மணி நேரத்தில் 11.55 கி.மீ., தொலைவு ஸ்கேட்டிங் மேற்கொண்டார். </p><p>புதுக்கோட்டை சேலஞ்சர் ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி, வீடியோ பதிவு செய்யப்பட்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. </p><p>இதனைத் தொடர்ந்து தற்போது இச்சாதனைக்கான பதிவுச் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.</p><p> இதுகுறித்து, பொழில் மகிழனின் தாய் சிவப்பிரியா கூறுகையில், “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-இல் ஏற்கெனவே கேரளத்தைச் சேர்ந்த 5 ஆண்டு 6 மாத வயதுள்ள சிறுவன் 57 நிமிடங்களில் 7.18 கிமீ தொலைவைக் கடந்து சாதனை புரிந்துள்ளார். </p><p>இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.</p><p> பொழில் மகிழன், 5 ஆண்டு 3 மாத வயது நிரம்பியவர். </p><p>ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சாதனையில் 57 நிமிடங்களில் 10.85 கிமீ தொலைவைக் கடந்தார். </p><p>தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவைக் கடந்து சாதனை முயற்சியை நிறைவு செய்தார்’’ என்றார். </p><p> புதுக்கோட்டை நகரிலுள்ள தனியார் பள்ளியில் யுகேஜி பயிலும் பொழில் மகிழனின் தந்தை ராஜு நீதிமன்றப் பணியாளர் ஆவார். </p><p>தாய் சிவப்பிரியா இல்லத்தரசி என்பது குறிப்பிடத்தக்கது.</p>
