புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு
9 Apr 2026, 5:30 am
<p><strong>புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு</strong></p><p>தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் பேட்டி. புதுச்சேரி, ஏப்.8- மக்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 209 பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>புதுச்சேரி கலை, வரலாறு அடிப்படையில் கீழுர், வடபழனி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளிகளில் தனித்துவத்தமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். பெண்கள் 30 வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பர்.</p><p>புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச் சாவடிகளையும் நிர்வகிப்பார்கள். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர்.</p>
