தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி 16ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு! மலையாளத்தில் உறுதிமொழி எடுத்த திமுக எம்எல்ஏ

20 May 2026, 10:22 pm
புதுச்சேரி 16ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு! மலையாளத்தில் உறுதிமொழி எடுத்த திமுக எம்எல்ஏ
<p><strong>புதுச்சேரி 16ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு! மலையாளத்தில் உறுதிமொழி எடுத்த திமுக எம்எல்ஏ</strong></p><p>புதுச்சேரி, மே 20 - புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. </p><p>புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 29 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் அ. அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். </p><p>இதில் மங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முதல்வர் ஆர். ரங்கசாமி முதலாவதாக உறுதிமொழி வாசித்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். </p><p>அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் காரைக்கால், மாஹே பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். </p><p>ஒன்றிய அரசு புதுச்சேரியில் இந்தியைத் திணிப்பதாகக் கூறியும், பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதை எதிர்த்தும் பாகூர் தொகுதி திமுக உறுப்பினர் ஆர். செந்தில்குமார் பிரெஞ்சு மொழியில் உறுதிமொழி ஏற்க அனுமதி கேட்டு பேரவை செயலாளரிடம் கடிதம் வழங்கியிருந்தார்.</p><p>அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அவர் பிராந்திய மொழியான மலையாள மொழியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். </p><p>உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் பேரவைக் கூட்டத்தைக் காலவரையின்றி தற்காலிக பேரவை தலைவர் அ. அன்பழகன் ஒத்திவைத்தார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.