தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெசவாளர்கள் காலனிப் பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

12 Nov 2025, 3:20 pm
நெசவாளர்கள் காலனிப் பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நெசவாளர்கள் காலனிப் பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>அவிநாசி, நவ.12- திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட நெசவா ளர் காலனிப்பகுதியில் பாதை &nbsp;அமைத்து தரக் கோரி புத னன்று பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;இந்த ஆர்ப்பாட்டத்தில், திருமுருகன் பூண்டி நகராட் சிக்குட்பட்ட நல்லாற்றிலி ருந்து, நெசவாளர் காலனி &nbsp;பகுதிக்கு சாலை அமைத்து &nbsp;தர வேண்டும். திருப்பூரில் &nbsp;இருந்து அவிநாசி செல்லும் சாலையில் திரு முருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட சென் டர் மீடியனில் உள்ள சோலார் விளக்குகள் &nbsp;சரிவர எரிவதில்லை, இதனால் பொதுமக்கள் &nbsp;அவதிப்பட்டு வருகின்றனர். இதை சீரமைத்து &nbsp;தர வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்ட &nbsp;ஸ்டாலின் முகாமில் செலவு செய்தது குறித்து &nbsp;தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் பெறப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் &nbsp;முறைகேடு நடைபெற்றுள்ளது. இது பற்றி &nbsp;மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். திருமுரு கன்பூண்டி நகராட்சிப் பகுதியில் எந்தவித முன் &nbsp;அனுமதியும் பெறாமல், சாலைகளை குழி &nbsp;தோண்டுவதும், அதை சரிவர மூடாமலும் விடு கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே உடனடியாக சாலைகளை சீரமைத்து &nbsp;கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசி யல் இயக்கத்தினர் பங்கேற்றனர். பொதுமக் கள் சார்பில் முன்வைத்த கோரிக்கைகளை மனுவாக தயார் செய்து நகராட்சி நிர்வாகத் திடம் அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.