மக்கள் குறைதீர் கூட்டம் : பெறப்பட்ட 340 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
18 May 2026, 10:50 pm
<p><strong>மக்கள் குறைதீர் கூட்டம் : பெறப்பட்ட 340 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு</strong></p><p>நாகர்கோவில்.மே.18- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலு வலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சி யர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம். மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உத வித்தொகை. குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சி யர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்கள் கு.சுகிதா (பொது), பத்மபிரியா (நிலம்), துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, துறை அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
