அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 330 எழுது மேசைகள் வழங்கல்
24 Mar 2026, 3:23 pm
<p><strong>அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 330 எழுது மேசைகள் வழங்கல்</strong></p>
<p>சென்னை,மார்ச் 24- சென்னை, அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி தங்களிடமிருந்த 330 இருக்கைகள் மற்றும் 330 எழுது மேசைகளை ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்ட செயல்பாட்டிற்காக வழங்கி யுள்ளது. இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் கல்வி வட்டாரத்தில் ஒரத்தி அருகிலுள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் நிறுவன ரும், சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்ட ளையின் நிர்வாக இயக்குநருமான விஜய கிருஷ்ணன் தெரிவித்தார். இருக்கை மற்றும் எழுது மேசைகளை அச்சிறுபாக்கம் வட்டம் மதுராந்தகம் வட்டம் வேடந்தாங்கல் அருகிலுள்ள சித்திரகூடம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கும் விழா செவ்வாயன்று (மார்ச்24) நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் ஜி. மணி வண்ணன் முதன்மை விருந்தினராக இவ் விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக் கான இருக்கைகளை ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் நிறுவுநரும், செயலாக்கு நருமான கவிஞர் விஜயகிருஷ்ணனி டமிருந்து பெற்றுக்கொண்டு பள்ளிக்கு வழங்கினார். சித்திரகூடம் பள்ளித் தலைமை ஆசிரியர் தி .இராசேந்திரன, சமூக ஆர்வலர் சுகுமார், ரங்கப்பன், திவ்யா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.</p>
