கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.70 கோடியில் கல்விக் கடனுதவி வழங்கல்
26 Feb 2026, 3:28 pm
<p><strong>கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.70 கோடியில் கல்விக் கடனுதவி வழங்கல்</strong></p>
<p>நாகர்கோவில்,பிப்.26- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தி லும் பிப்ரவரி மாதம் கடைசி வாரம் சிறப்பு கல்விக்கடன் மேளா மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் நடத்தப்படவேண்டும் என்று நிதித் துறை செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத் தில் பிப்ரவரி 26 அன்று வின்ஸ் கிறிஸ்டியன் பொறியல் கல்லூரி சுங்கான்கடையில் கல்விக்கடன் மேளா நடைபெற்றது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி, இந்தி யன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் நடந்த சிறப்பு கல்விக் கடன் முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி அளவில் கல்விக் கடன் ஆணை கள பத்மநாபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வின்ஸ் கிறிஸ்டியன் பொறியல் கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் ஜே. ஏ. அலெக்ஸ் ராஜ்ஜு பாலன், துணை முதல்வர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வ ராஜ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் ரந்தீர் மகேஷ் குமார் மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். </p>
