முந்தய பக்கம்

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

1 Jan 2026, 4:52 pm
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு  உதவி உபகரணங்கள் வழங்கல்
<p><strong>மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு &nbsp;உதவி உபகரணங்கள் வழங்கல்</strong></p> <p>பெரம்பலூர், ஜன.1 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத் திறனுடைய சிறப்பு குழந்தைகளுக்கு ரூ.5.94 லட்சத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ந.மிரு ணாளினி புதன்கிழமை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில், 2025-26 ஆம் &nbsp;கல்வியாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக் &nbsp;கல்வித்துறை சார்பில் மருத்துவ மதிப்பீட்டு &nbsp;முகாம், சுகாதாரத் துறை, மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் &nbsp;நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம் களில் மாற்றுத் திறனுடைய சிறப்பு குழந் தைகளை கண்டறிந்து, அக்குழந்தை களுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி &nbsp;உபகரணங்களுக்கான அளவீடு (Measurement) மற்றும் கற்றல் - கற்பித் தல் உபகரணங்கள் குறித்த தேவைப் பட்டி யல் தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில், அறிவுசார் குறை பாடுடைய 70 குழந்தைகளுக்கு கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் (TLM Kit) &nbsp;மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி (CP &nbsp;Chair), சக்கர நாற்காலிகள் (Wheelchair Child) &nbsp;என ரூ.5.94 லட்சம் மதிப்பிலான உப கரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் இலவசமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி &nbsp;அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் &nbsp;கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram