சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்கிடுக! பால் உற்பத்தியாளர் சங்க மதுரை மாநாடு கோரிக்கை
26 Dec 2025, 4:32 pm
<p><strong>சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்கிடுக! பால் உற்பத்தியாளர் சங்க மதுரை மாநாடு கோரிக்கை</strong></p>
<p>மதுரை, டிச.26- தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட 5 ஆவது மாநாடு கருமாத்தூரில் நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி அவர்களின் நினைவு ஜோதியினை தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செய லாளர் கே. ராஜேந்திரன் எடுத்துக் கொடுக்க பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.சி. வெண்மணி சந்திரன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நினைவுஜோதி ஏற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் ஏ.சி. வெண்மணி சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.இளங்கோவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பால் சங்கத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட நிர்வாகி மகேந்திரன், ஸ்டாலின் குமார், ஜோதி பாசு, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பெரிய கருப்பன், மாவட்ட பொருளாளர் கே.இன்பராஜ் . கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரன். பழையூர் கனகவேல் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாநிலப் பொதுச் செயலா ளர் பி. பெருமாள் நிறைவுரை யாற்றினார். விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பி னர் வி.பி.முருகன், குருசாமி ஆகியோர் நன்றி கூறினர். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவராக பி. மகேந்திரன், மாவட்டச் செய லாளராக ஏ.சி. வெண்மணி சந்திரன், மாவட்ட பொரு ளாளராக எஸ். தங்கமாயன் ஆகியோர் உட்பட 30 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் லிட்டருக்கு பத்து ரூபாய் விலை உயர்த்திக் கொடுக்க வேண்டும். 50 சதவீத மானி யத்தில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும். கால் நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் ஆவின் ஒன்றிய நிர்வாகமே வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும். மதுரை ஆவினின் லாபத்தில் பொங் கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
